நா.த.க. தலைவர் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் சுட்டுரைக் கணக்குகள் முடக்கப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கிவெங்கட்ராமன் கண்டனம்!

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தமிழன் சீமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் நா.த.க. முதன்மை நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்திக், சுனந்தா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரின் சுட்டுரை (ட்விட்டர்) கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் முடிவுக்கு இணங்க இம்முடக்கத்தை ட்விட்டர் நிறுவனம் மேற் கொண்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள இயலாத ஆரியத்துவ பா.ச.க., தனது இந்திய ஆட்சி அதிகாரத்தின் வழியே தொடர்ந்து எதிர்கருத்தாளர்களை வேட்டையாடி வருவது நாம் அறிந்ததே. கர்நாடகத்தின் கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்டோரை நேரடியாகக் கொன்றதில் தொடங்கி, எதிர்கருத்தாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்குவது வரை இச்செயல்பாட்டின் தொடர்ச்சியாகவே உள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும்,

குறிப்பாக தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர்களின் சுட்டுரைக் கணக்குகளை முடக்கி, தான் தமிழினத்தின் எதிரி என பா.ச.க. மீண்டுமொருமுறை தம்மை பறைசாற்றிக் கொண்டுள்ளது என்றும் கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும் இச்செயல்பாட்டை உடனடியாகக் கைவிட்டு, இக்கணக்குகளை மீண்டும் இயக்கிக் கொள்ள ட்விட்டர் நிறுவனம் அனுமதிக்க வேண்டும். கருத்துரிமையைக் காலில்போட்டு மிதிக்கும் இந்திய அரசின் செயலுக்கு இணங்கிப் போகக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

நா.த.க. தலைவர் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் சுட்டுரைக் கணக்குகள் முடக்கப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது!

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.