9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

இந்தூர்:
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 54 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 47 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 11 ரன்கள் இடைவெளியில், எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 197 ரன்களில் ஆல் அவுட் ஆனதுடன் 88 ரன்கள் முன்னிலை பெற்றது. இதற்கடுத்து களமிறங்கிய இந்திய அணி, 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை தமிழக வீரர் அஸ்வின் வீசினார். 2-வது பந்திலேயே கவாஜா விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனையடுத்து லபுசேன் – ஹேட் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 18.5 ஓவரில் 78 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9-ந் தேதி தொடங்குகிறது.

தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து&மாத்திரை வழங்குவதில் காலதாதம்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

சென்னை: DAYA(A)) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை

கபடி வீராங்கணை கண்ணகிநகர் கர்த்திகாவிற்கு இந்திய அணியில் இடம் மறுத்தது ஏன?: தயா அமைப்பு கேள்வி

சென்னை:DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு நிறுவன தலைவர் இரா.மு.அருண்குமார் வெளியிட்டுள்ள

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து&மாத்திரை வழங்குவதில் காலதாதம்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

சென்னை: DAYA(A)) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை

கபடி வீராங்கணை கண்ணகிநகர் கர்த்திகாவிற்கு இந்திய அணியில் இடம் மறுத்தது ஏன?: தயா அமைப்பு கேள்வி

சென்னை:DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு நிறுவன தலைவர் இரா.மு.அருண்குமார் வெளியிட்டுள்ள

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்