எங்கெல்லாம் குப்பை கொட்டக்கூடாது?: சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பு

சென்னை :
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. திடக்கழிவுகளை கையாள சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து குப்பை வண்டிகள் மூலம் பெற்று வருகின்றனர்.
இதேபோல, தெருக்களின் முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் லாரிகள் மூலம் குப்பை சேகரிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் திடக்கழிவுகளை சாலையில் கொட்டி வருகின்றனர்.
குறிப்பாக, தெரு முனைகளிலும், நடைபாதைகளுக்கு அருகிலும், நீர்நிலைகளிலும், ஆஸ்பத்திரி அருகேயும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பொது இடங்களில் குப்பை கொட்டுவது குறையவில்லை. எனவே, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் சென்னையில் முதல் கட்டமாக 18 சாலைகளை குப்பை இல்லாத சாலைகளாக மாற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் எந்தெந்த இடங்களில் குப்பை கொட்ட தடை விதிக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்து வந்தனர். அதன்படி 188 இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். 188 இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்ட தடை விதிக்கப்பட இருக்கிறது. அதாவது, தெருமுனைகள், ஆஸ்பத்திரி, மார்க்கெட் பகுதி, குப்பை தொட்டி அருகில், பள்ளி, கல்லூரி அருகில் என இந்த இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குப்பை கொட்டு நபர்கள் யார்? என்று தீவிரமாக கண்காணிக்கப்படும். ஒரே நபர் அடிக்கடி குப்பை கொட்டுவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இரவு நேரங்களில் பணியாற்றும் 3 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் இந்த பணியில் இணைந்து செயல்படுவார்கள். அவர்களும் பொதுமக்களுக்கு தங்களின் அறிவுரைகளை வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

எங்கெல்லாம் குப்பை கொட்டக்கூடாது?: சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பு

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய