27வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது…..

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் விளையாட தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வரும் இத்தொடரின் முதலாவது லீக் சுற்றில் மேற்கு வங்கம், அருணாச்சல், உத்தர பிரதேசம் அணிகளை வீழ்த்திய தமிழ்நாடு அணி தனது பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த 2வது லீக் சுற்றின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அணி ஒடிஷா (3-0), ஜார்க்கண்ட் (3-0), சண்டிகர் (3-0), கர்நாடகா (4-0), பஞ்சாப் (4-0) அணிகளை வீழ்த்தி 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததுடன் அரையிறுதிக்கும் முதல் அணியாக முன்னேறியது.இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த முதல் அரையிறுதியில் தமிழ்நாடு – ரயில்வே அணிகள் மோதின. அதில் தமிழ்நாடு 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. 3வது நிமிடத்தில் பிரியதர்ஷினி, 53வது நிமிடத்தில் இந்துமதி கதிரேசன் கோல் அடித்தனர். 47வது நிமிடத்தில் ரயில்வே வீராங்கனை சுப்ரியா ரவுத்ரே அடித்த சுயகோல் தமிழ்நாட்டின் கோல் எண்ணிக்கையை உயர்த்தியது. ரயில்வே தரப்பில் திபர்னிதா தேவ் (93வது நிமிடம்) ஆறுதல் கோல் போட்டார்.

இந்த வெற்றியின் மூலம், 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனியர் மகளிர் கால்பந்து பைனலுக்கு தமிழ்நாடு அணி முன்னேறி உள்ளது. இறுதி ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. தமிழக அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (எஸ்டிஏடி) பயிற்சி பெற்றவர்கள். நடப்பு தொடரில் தமிழ்நாடு அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் பைனலுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

27வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது…..

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு