சென்னை வேளச்சேரியில் தொழிலாளி கொலை…

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் கொளஞ்சி 45. இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கியிருந்து கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே மேம்பாலத்தின் கீழே தென்காசியைச் சேர்ந்த அவினாஷ் 22 என்பவரும் தங்கியிருந்து, கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

கொளஞ்சியும், அவினாஷும் நேற்று முன்தினம் இரவு தரமணி இணைப்புச் சாலையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றவே அவினாஷ் தன்னிடம் இருந்த கத்தி எடுத்து கொளஞ்சியை படுபயங்கரமாக கத்தியால் தாக்கினார். இதில் படு காயமடைந்த கொளஞ்சி சம்பவம் நடந்த இடத்திலேயே உயிர்யிழந்தார்.

இதுகுறித்து பொதுமக்கள், வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அங்கு விரைந்து சென்று கொளஞ்சியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரினச் சேர்க்கை விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

சென்னை வேளச்சேரியில் தொழிலாளி கொலை…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத