CBI, ED பாஜகவின் அணிகள் போல் செயல்படுறது : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றசாட்டு….

சென்னை:
ஐ.டி, சி.பி.ஐ அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு துறைகள் பாஜகவின் அணிகள் போல் செயல்படுகிறது. என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி கையெழுத்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது என்றார்.

banneet.in என்ற ஆன்லைன் தளம் மூலம் 3 லட்சம் கையெழுத்துகளை பெற்று இருக்கிறோம். போஸ்ட் கார்டு மூலம் சுமார் 8 லட்சம் கையெழுத்துகளை பெற்று இருக்கிறோம். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் கையெழுத்து பெற திட்டமிடப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வால் தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை சந்தித்து கையெழுத்து பெறுவேன். ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி உரிமை, மருத்துவ உரிமைக்காக திமுக என்றும் பாடுபடும்.

நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். நீட் விலக்கு கோரி பெறப்படும் கையெழுத்துக்கள் குடியரசு தலைவரிடம் அளிக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேவையில்லாத சோதனைகள் அதிகரித்துள்ளது. சி.பி.ஐ. அமலாக்கத்துறை போன்றவை பா.ஜ.கவின் அணிகள் போல் செயல்படுகிறது என்றார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

CBI, ED பாஜகவின் அணிகள் போல் செயல்படுறது : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றசாட்டு….

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச