காரைக்காலில் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

காரைக்கால்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் கலவரத்தை கண்டு கொள்ளாத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காரைக்காலில் தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாஜிம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

நாக.தியாகராஜன் எம்.எல்.ஏ., வக்கீல் வெற்றிச்செல்வன், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர் பழங்குடி இன பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கலவரத்தை தடுக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காரைக்கால் மதகடி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அரசியல் குழு செயலாளர் வணங்காமுடி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மணிப்பூரில் கலவரத்தை கண்டுகொள்ளாத மத்திய, மணிப்பூர் மாநில அரசுகள் உடனே ராஜினமா செய்யவேண்டும். பெண்களை நிர்வாணப்படுத்திய காட்டுமிராண்டிகளை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

காரைக்காலில் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட