நைஜீரியாவில் எண்ணெய் டேஙகர் வெடித்து தீ விபத்து; 20 பேர் பலி

நைஜீரியா:
நைஜீரியாவில் ஒண்டோ மாகாணத்தில் எண்ணை டேங்கர் ஒன்று வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 20 உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. நைஜீரியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. நைஜீரியா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், ஒண்டோ மாகாணத்தில் இன்று எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 குழந்தைகள், 1 கர்ப்பிணி உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீ விபத்தால், லாகோஸ்-பெனின் விரைவுச் சாலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலையைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். டேங்கர் வெடித்துச் சிதறிய விபத்தால், அப்பகுதி தீப்பிழம்புடன் காட்சியளிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில், இதுபோன்ற எண்ணெய் டேங்கர்கள் வெடித்து விபத்துகள் ஏற்படுவதும் இங்கு அடிக்கடி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

நைஜீரியாவில் எண்ணெய் டேஙகர் வெடித்து தீ விபத்து; 20 பேர் பலி

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட