பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு 103, அண்ணா டவர் பார்க்கில் ரூ.89 மதிப்பில் பார்வை கோபுரம் மற்றும் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பூங்கா மேம்பாடு தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.மோகன், முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், எம்.சிவகுரு பிரபாகரன், மண்டலக்குழுத் தலைவர் ஜெயின், மாமன்ற உறுப்பினர் புஷ்பலதா ஜெய்சங்கர், தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






