அந்தமான்:
அந்தமான¢ நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று அதிகாலை 5:40 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபர் தீவுகளில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 29ம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கடந்த அன்று நள்ளிரவு 12.53 மணியளவில் 69 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
அதற்கு முன்னதாக கடந்த ஜூலை 9-ம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 70 கி.மீ ஆழத்தில் காம்ப்பெல் விரிகுடாவில் இரவு 7.39 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்தமான் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்
மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய






