ஆருத்ரா கோல்டு நிறுவன ம் ரூ.1,000 கோடி மோசடி?

சென்னை:
சென்னை அமைந்தக்கரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ஆருத்ரா. இந்த நிறுவனம் பொதுமக்களுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டித் தருவதாக கூறி ஆசைகாட்டி சுமார் ஆயிரம் கோட்டிக்கு மேல் நிதி திரட்டியது. ஆனால் வட்டியும், முதலும் முறையாக தரவில்லை.
இதனால் வாடிக்கையாளர்கள் பலர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் ஜி.கே.எம் டிரேடிங் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா செந்தாமரை மற்றும் அவரது சகோதரர் முத்து ஆகியோர் நடத்தி வந்தனர்.
இவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்கு முக்கிய முகவராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர் தமது ஜி.கே.எம். டிரேடிங் மூலம் காஞ்சிபுரம் பகுதியில் பலரிடம் முதலீடு பெற்று ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இதுபோல் சுமார் ரூ.500 கோடி அளவுக்கு இவர் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதலீடு திரட்டியதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சென்னை குற்றப்பிரிவு போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவரிடம் நடத்திய விசாரணையில் சுமார் 200 பேரிடம் இந்த ரூ.500 கோடி முதலீட்டை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் இந்த மோசடி தொடர்பாக சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சந்திர கண்ணன் என்ற முகவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரது வீட்டிலிருந்து 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் பணப் பரிவர்த்தனை உட்பட பல்வேறு விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்நிறுவனத்தில் பலர் தனது மகள் திருமணத்துக்கு வைத்திருந்த பணம், ஓய்வூதியப் பலன்கள் மூலம் கிடைத்த பணம் ஆகும்.
வாழ்நாள் முழுவதும் சேமித்து வீடு வாங்குவதற்கு சேர்த்து வைத்திருந்த பணம் ஆகியவற்றை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. தற்போது முதலீடு செய்த பணமாவது வருமா என்பது தெரியாமல் தவத்து வருகின்றனர். இந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள தொழிலாளர்கள், நடுத்தர மக்களை குறிவைத்து பல்வேறு மோசடி நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நடுத்தர குடும்பத்தினர் இதுபோல் பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.
இதில் பல காவல் துறையினரும் தப்பவில்லை. மொத்தமாக காஞ்சிபுரம் பகுதியில் மட்டுமே ஆருத்ரா கோல்டு மட்டுமின்றி பல்வேறு நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து இழந்த தொகை ரூ.1,000 கோடி அளவுக்கு இருக்கும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

ஆருத்ரா கோல்டு நிறுவன ம் ரூ.1,000 கோடி மோசடி?

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.