1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. நடுவு நிலைமை
பகைவர், நண்பர், இரண்டுமல்லாத அயலவர் ஆகிய
மூவரிடமும் நடுநின்று உண்மைப்படி நடத்தல்
கேடும் பெருக்கமும் இல்அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி. (குறள் : 115).
விளக்கம்:
கேடும் ஆக்கமும் உலகத்தில் இல்லாதவை அல்ல. ஆகையால் நெஞ்சில் நடுநிலைமை தவறாது இருப்பதே சான்றோர்க்கு அணி ஆகும்.






