உத்தரகாசி, தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வில் உள்ள தக்காளி . இதனால், மக்கள் கவலையடைந்தனர். வரத்து குறைவு மற்றும் மழை காரணமாக விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை தக்காளியின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதனிடையே தக்காளி விலை சற்று குறைந்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் யாரும் எதிர்பாரா வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உத்தரகாசி மாவட்டத்தில் ஒரு கிலோ 200 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது, அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைய செய்ததுடன், தக்காளி வாங்கவே யோசிக்கும் அவல நிலையை ஏற்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






