இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இராயபுரம் மண்டலம், மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாட்டினை இன்று (28.08.2023) ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, கூடுதல் தலைமைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி
ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






