நாடுமுழுவதும் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கிவந்த 62 கன்டோன்மென்ட் நிர்வாகங்களை கலைத்து விட்டு மாநில அரசுகளிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து கன்டோன்மென்ட் போர்டு தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் தலைமையில் G. பரமேஸ்வரி, பொருளாளர் வரவேற்புரை ஆற்றினார் K. இராஜகோபாலன் மு.துணை பொதுச்செயலாளர் AICBEF வஹிதா நிஜாம் அகில இந்திய செயலாளர் AITUC முன்னிலை வகித்தனர். தோழர் K. சுப்பராயன் M.P., அகில இந்திய துணை தலைவர் AITUC ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். A. மூர்த்தி, மாவட்ட பொது செயலாளர், காஞ்சிபுரம் மாவட்டம் AITUC R.மனோகரன் ஓய்வூதியர் சங்கம் வாழ்த்துரை வழங்கினர். ஆ. அருண், செயலாளர் (பொது) நன்றியுரை கூறினார். இதில் பல்லாவரம் தலைமைச் செயலகம் சென் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட கன்டோன்மென்ட்டில் பணியாற்றிய திரளான ஊழயர்கள் கலந்து கொண்டனர்.







