கன்னியாகுமரி மாவட்ட பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பாக பார்வதிபுரம் தலைமையகத்தில் தீபாவளி விழா நடைபெற்றது இதில் திருவருள் பேரவை பொதுச் செயலாளர் டேனியல். பிரம்ம ஞான சபை தலைவர் ஆபத்து காத்த பிள்ளை. சாந்தி கிரி ஆசிரமம் கீதா. ஸ்ரீவைகுண்டர் பாலிடெக்னிக் செல்ல கண்ணன். நட்பு கரங்கள் இயக்குனர் ரோஸ்மேரி. பி டபுள்யூடி இந்தியா இயக்குனர் ஸ்டீபன். முஸ்லிம் உதவும் சங்கம் இணைச் செயலாளர் பரிதா பேகம். சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர். குழந்தைசாமி. திருவருள் பேரவை பொருளாளர் ஊனா சாகுல் ஹமீது. மத்தியாஸ். பிஷப் இம்மானுவேல். பிரம்மா குமாரி கன்னியாகுமரி மாவட்ட தலைவி கோகிலா. தீபாவளியின் விளக்கம் மற்றும் தீபம் ஏற்றினார்கள். ஆடல் பாடல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. விழாவில் குமரி ரமா வரவேற்றார்கள். பிரம்மா குமாரி அமுதா வித்யாலயத்தின் அறிமுகத்தை கொடுத்தார்கள். பிரம்மா குமாரி பிரசன்னா குமாரி மேடை ஒருங்கிணைப்பாளராக இருந்தார்கள். திருவருள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66





