காய்கறிகளை மாடித் தோட்டத்தில் வளர்க்கும் மாற்று திறனாளி !

மதுரை: வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை மாடித் தோட்டம் மூலம் விளைவித்து தற்சார்பு வாழ்க்கை வாழ்வதோடு, நாட்டுக் காய்கறிகள் விதைகளை மற்றவர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறார் மாற்றுத் திறனாளி ஆத்திக் கண்ணன்.

மதுரை பழைய குயவர்பாளையம் சாலை புனித சேவியர் தெருவைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளி பா.ஆத்திக் கண்ணன் (45). ஒன்றரை வயதில் போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்டவர். ஐ.டி.ஐ. கணினி தொழில் நுட்பம் படித்துள்ளார். கணினியில் பழுதுநீக்கும் பணியை பார்ப்பதோடு, அண்ணா நகரிலுள்ள கண் மருத்துவமனையில் அலுவலக உதவியாளராகவும் இருக்கிறார். மன ஆறுதலுக்காக மாடித் தோட்டத்தை ஏற்படுத்தியவர் தற்போது வீட்டுக்கு தேவையான காய் கறிகள், கீரைகள், பூக்களை உற்பத்தி செய்வதோடு பாரம்பரிய நாட்டு ரக காய்கறி விதைகளை உற்பத்தி செய்து, அந்த விதைகளை மற்றவர்களுக்கு இலவசமாகவும் கொடுத்து வருகிறார்.

இது குறித்து பா.ஆத்திக்கண்ணன் கூறியதாவது: கண் மருத்துவர் பாஸ்கர ராஜன் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறேன். அவர் வறண்ட நிலத்தை சோலைவனமாக மாற்றியுள்ளார். அதைப்போல் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். மேலும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு கணினி பழுது நீக்கச் சென்றபோது மாடியில் செடிகளை அதை பார்த்த பிறகு எனது வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க முடிவு செய்தேன். மாடித்தோட்டத்துக்குத் தேவையான செம்மண்ணை 25 கி.மீ. தூரம் இரு சக்கர வாகனத்தில் சென்று மூட்டைகளில் கொண்டு வந்தேன். எனது தாயார், மனைவியின் உதவியோடு மொட்டை மாடியில் தோட்டம் அமைத்தேன். இதில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பந்தல் கொடிகள் மற்றும் கீரை வகைகள், பூச்செடிகளை வளர்த்து வருகிறேன்.

என்னால் தொடர்ந்து நிற்க முடியாது என்பதால் பெரும்பாலும் உட்கார்ந்துதான் வேலை பார்ப்பேன். தற்போது வீட்டுக்கு தேவையான காய் கறிகள், கீரைகள், பூக்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறேன். மாடித் தோட்டம் அமைத்து கடந்த 2 ஆண்டுகளாக தற்சார்பு வாழ்க்கை வாழ முடிகிறது. மேலும் வண்ண மீன்களையும் தொட்டியில் வளர்த்து வருகிறேன்.

குளத்தில் வளரும் அல்லி ரக செடிகளையும் வட்ட வடிவ பிளாஸ்டிக் டப்பில் வளர்த்து வருகிறேன். மாடித் தோட்டம் நண்பர்கள் குழுவை அமைத்து ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். மேலும், மதுரை மீனாட்சி விதைப் பெட்டகத்தை ஏற்படுத்தி பாரம்பரிய நாட்டு ரக விதைகளை சேமித்து, தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கி வருகிறோம் என்று கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

காய்கறிகளை மாடித் தோட்டத்தில் வளர்க்கும் மாற்று திறனாளி !

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.