காவல்துறையில் “சட்ட ஆலோசகர்” என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்: முதல்tர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:
தமிழக காவல்துறையில் 101 புதிய அறிவுப்புகளை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
காவல்துறை மானிய கோரிக்கையில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை வானகரம், மேடவாக்கம், ஆவடி, புதூர் உள்ளிட்ட இடங்களில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கப்படும். விழுப்புரம் மேல்மலையனூர், உள்ளிட்ட 5 இடங்களில் புதிய தாலுக்கா காவல்நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் மாநகர் உட்பட்ட பெரும்பாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட காவல்நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
காஞ்சிபுரம், திருச்சி, நெல்லை உட்பட 4 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும். ஆண்டுதோறும் காவலர்களுக்கு சீருடைப்படி ரூ.4,500 வழங்கப்படும். காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். பெண் காவலர்களுக்காக சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் காவல் விடுதி கட்டப்படும்.
சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக ரூ.5.5 கோடியில் 3,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ஆவடி, தாம்பரம் காவல்நிலையங்களிலும் காவலர்களுக்கு நாளொன்று உணவுப்படி ரூ.300 ஆக வழங்கப்படும். ஒரகடம், ராதாபுரம், ரிஷிவந்தி உள்ளிட்ட 4 பகுதிகளில் ரூ.7.25 கோடியில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
தமிழக காவல்துறை, தீயணைப்புத்துறைக்காக சட்ட ஆலோசகர் என்ற பணியிடம் புதிதாக உருவாக்கப்படும். நீதிமன்ற வழக்குகளில் அரசு வழக்கறிஞர்களுக்கு உதவ சட்ட அலோசகர் பணியிடம் இருக்கும். காவலர்களுக்கான எரிபொருள் படி 5 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.370-லிருந்து ரூ.515 ஆக உயர்ந்த்தி வழங்கப்படும். காவலர் அங்காடி வசதியை ஊர்காவலர் படையினருக்கும் விரிவுபடுத்தப்படும்.
குற்றவாளிகளை கைது செய்யும் போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த 25 ரிமோட் மூலம் விலங்கிடும் ஸிமீனீஷீtமீ ஸிமீstக்ஷீணீவீஸீt கீக்ஷீணீஜீ கருவி வாங்கப்படும். இவ்வாறு அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

காவல்துறையில் “சட்ட ஆலோசகர்” என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்: முதல்tர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட