காவிரி நீர் பெற திமுக நடவடிக்கை எடுக்கவில்லை – பழனிசாமி குற்றச்சாட்டு….

திருச்சி: திமுக கூட்டணியில் இடம் பெற்றுஉள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற்றுத் தர திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவெறும்பூர் பெல் வளாகத்தில் அமைக்கப்பட்டுஉள்ள எம்ஜிஆர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய மாநாட்டை விட, இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிகளவு தொண்டர்கள் கூடியுள்ளனர். இன்றைக்கும் உயிரோட்டமுள்ள கட்சியாக அதிமுக உள்ளது. அமலாக்கத் துறை, வருமான வரித் துறை நடவடிக்கையால் திமுகவில் உள்ள பல அமைச்சர்களுக்கு தூக்கமில்லை. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் இருந்த செந்தில் பாலாஜியை பார்க்க தமிழக அமைச்சரவையே அங்கு சென்றது. அவர் வாய் திறந்தால் திமுக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும். அதனால் தான் அவர்கள் அங்கு சென்றனர்.

அதிமுக ஆட்சியில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 3 மருத்துவ கல்லூரிகளுக்கு மூடுவிழா காணக்கூடிய அளவுக்கு அலட்சியமாக உள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி நீட் தேர்வு விலக்குக்கு கையெழுத்து போட அவருக்கு நேரமில்லைபோலும். 52 சதவீத மின்கட்டணம் உயர்வால் தொழில்நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் ஷாக் அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இடம் பெற்று உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகத்திடமிருந்து காவிரியில் நீர் பெற்று தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ராகுல்காந்தியை பிரதமராக ஆக்க குரல் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின், காவிரி பிரச்சினைக்கு குரல் கொடுக்காதது ஏன்? என்று எடப்பாடி தெரிவித்தார்.

கூட்டத்தில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், ஆர்.வி.உதயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

காவிரி நீர் பெற திமுக நடவடிக்கை எடுக்கவில்லை – பழனிசாமி குற்றச்சாட்டு….

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65