நீட் தேர்வுக்கு தந்தை மகன் தற்கொலை: குரோம்பேட்டையில் மதிமுக ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டை:
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
எனவே நீட் என்ற உயிர்க்கொல்லி நோயை விரட்டியடித்திட நீட் தேர்வை (மருத்துவ நுழைவுத் தேர்வு) ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும், தமிழ்நாடு ஆளூநர் ரவியையும் கண்டித்து
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் மா.வை.மகேந்திரன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மல்லை சத்யா, பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி, மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளரும், தாம்பரம் மாமன்ற உறுப்பினருமான யாகூப், தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவரும் தாம்பரம் மாமன்ற உறுப்பினருமான செந்தில் குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாம்பரம் மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தேவ அருட்பிரகாசம், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருநீர்மலை தமிழரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி பொறுப்பாளர் முருகன், ம.ம.க. மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன், மருத்துவ கல்லூரி மாணவர் பயாசுதீன், மதிமுக மாவட்ட பொருளாளர் நாராயணன், மதிமுக மாவட்ட துணை செயலாளர் குரோம்பேட்டை நாசர், முடிச்சூர் ஜெயசீலன், மலர்க்கொடி, பாபு, மார்டீன், கோபிநாத், முகவை, சொக்கலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். குரோம்பேட்டை இந்திராநகர் தவசி நன்றி கூறினார்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

நீட் தேர்வுக்கு தந்தை மகன் தற்கொலை: குரோம்பேட்டையில் மதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச