12.07.2023 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கல்லூரி மாணவ மற்றும் மாணவிகளுக்கான
கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுத் தொகையினை
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இந்திய கூடைப்பந்து வீராங்கனை பத்ம ஸ்ரீ அனிதா பால்துரை மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






