கோவையில் ஒரே நாளில் ரூ.3,749 கோடி வங்கி கடன்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்

கோவை:
கோவை கொடிசியா வளாகத்தில் வங்கிகள் சார்பில் மாபெரும் கடனு தவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமை ச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, சுமார் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி னார்.
மாநில அளவிலான வங்கிகள் குழு மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி கள் சார்பில் மொத்தம் 948 வங்கிக் கிளைகள் வாயிலாக இந்த கடனுதவிகள், சுயதொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர், சாலையோர வியாபாரிகள், வேளாண் உற்பத்தியாளர்கள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரா ன், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை, வங்கிகள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி வருகிறார். 100 பேருக்கு திட்டமிட்டால் 20 பேருக்கு மட்டுமே அத்திட்டங்கள் சென்றடைந்த நிலையை மாற்றி, அவற்றை முழுமையாக 100 பேருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுதான் பிரதமரின் விருப்பம் என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் 23,800 பேருக்கு சில்லறைக் கடன்கள் 1,828 கோடி ரூபாய் வழங்கப்படுகின்றது என்றும் 2,904 புதிய முத்ரா கடன்கள் வங்கி மூலம் வழங்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் பிரிவைச் சேர்ந்த 18 பேருக்கு சுமார் 4 கோடி அளவுக்கு ஸ்டாண்ட் அப் இந்தியா திட்ட கடன்கள் இன்று வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். தெருவோர வியாபாரிகள் 7,911 பேரு க்கு ஸ்வநிதி கடன்கள் இன்று வழங்கப்படு வதாகவும் அவர் தெரிவித்தார்.
வங்கியை தேடி அலைந்த காலம் மாறி வங்கிகள் தேடிவந்து கடன் கொடுக்கின்ற நிலை தற்போது இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சிறு, குறு தொழில்களுக்கு கடன் உதவி வழங்க சிட்பி வங்கியின் இரண்டாவது கிளை கோவையில் துவங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சந்திரயான் விண்கலத்தின் மாதிரிகளை மத்திய அமைச்சர் பரிசளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை அடுத்து கோவை கொடிசியா வளாகத்தில் இயங்கி வரும் ராணுவத் தளவாடங்கள் மற்றும் பாதுகாப்புக் கருவிகளுக்கான அடல் தொழில் பாதுகாப்பு மையத்தினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரா மன் பார்வையிட்டார்.
முன்னதாக கோவை விமான நிலையம் அருகே இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியான SIDBI வங்கியின் புதிய கிளையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

கோவையில் ஒரே நாளில் ரூ.3,749 கோடி வங்கி கடன்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்