சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னைச் சரியாக மதிக்கவில்லை என்ற விரக்தியில் இருந்ததாகக் கூறப்படும் கயல்விழி, அடையாறில் உள்ள தனது கட்டிடத்தில் இயங்கும் வங்கியின் மின்தூக்கி (Lift) பழுதானது குறித்து வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் தொலைபேசியில் பேசியதால் மேலும் ஆத்திரமடைந்துள்ளார். ஜூலை 20 அன்று நேரடியாக வங்கிக்கு வந்து மேலாளரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், திடீரென அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்து ரகளையில் ஈடுபட்டார். இத்தாக்குதல் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின்பேரில் அடையாறு காவல்துறையினர் கயல்விழி மீது வழக்குப்பதிவு செய்து, அவரை விரைவில் கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது






