சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் அமைந்துள்ள கூட்ட அரங்கு மற்றும் உணவகப் பகுதியை மாற்றியமைத்து, முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அவரது செயலாளர்களுக்கான அறைகளை அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை முடுக்கிவிட்டுள்ளது. இதன் காரணமாக அங்குச் செயல்பட்டு வரும் சில அரசுத் துறைகளின் பிரிவுகளுக்கு மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் பாதியில் புதிய அலுவலகம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது






