சென்னை பெருநகர காவல் உயரதிகாரிகளுக்கு ஒரு நாள் நிறைவு வாழ்வு (well being) பயிற்சி முகாம் நடத்தபட்டது…

காவல்துறை அதிகாரிகள் பணித்திறனை மேம்படுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல், துணை ஆணையாளர்கள் முதல் கூடுதல் ஆணையாளர்கள் வரையிலான காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள்
நிறைவாழ்வு பயிற்சி முகாம் (One Day Workahop on Wel-Beng) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ராத்தோட், நேற்று (15.07.2023) எழும்பூரில் உள்ள காவல் அதிகாரிகள் விடுதியில் சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் துணை ஆணையாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள காவல் உயரதிகாரிகளுக்கு, ஒரு நாள் நிறைவாழ்வு (Well Beng) பயிற்சி வகுப்பை அவர்கள் துவக்கி வைத்தார். இந்த பயிற்சி வகுப்பில் காவல் அதிகாரிகள் சிறந்த விளங்கவும், பணியிலும், குடும்ப வாழ்விலும் மனநலனையும், உடல் நலனையும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பேணி காக்க தகுந்த மன நல மேலும் தங்களது கீழ் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் நலனை கையாள்வது, குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி காவல் அதிகாரிகள் மற்றும் செய்வதும் குறித்தும், பணியின் போது சக ஆளிநர்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்தும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த நிறைவாழ்வு பயிற்சி வகுப்பு காவல் கூடுதல் துணை காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆணையாளர்கள், ஆய்வாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். மருத்துவர்கள் நம்பி மற்றும் சேகர்காசி ஆகியோர் மேற்படி நிறைவாழ்வு பயிற்சி வகுப்பை நடத்தி, மனநலம் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் எடுத்துரைத்தனர். இந்த நிறைவாழ்வு பயிற்சி முகாமில் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, (தெற்கு), முனைவர் J.லோகநாதன். (தலைமையிடம்), சி.மகேஷ்வரி, (மத்திய குற்றப்பிரிவு). அனைத்து காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் காவல் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

சென்னை பெருநகர காவல் உயரதிகாரிகளுக்கு ஒரு நாள் நிறைவு வாழ்வு (well being) பயிற்சி முகாம் நடத்தபட்டது…

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்