சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் ஐடிஐ பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஐடிஐ பிரிவில் தொழில் பழகுநர்கள் பயிற்சிக்கு தேவைப்படுகிறார்கள். பின்வரும் ITI-பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்பு முகாம் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து தொழில் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக அனுமதி கோரப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக தொழிற் பழகுநர்கள் பயிற்சிக் காலியிடங்களை நிரப்பும் வகையில் வரும் 29-11-2023 அன்று காலை 10 மணிக்கு மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டை, சென்னையில் நடைபெறும் சிறப்பு முகாமில் மாணவர்களை கலந்து கொள்ளுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.







