சென்னை:
சென்னை சைதாப் பேட்டையில் இன்று மாலை லேசான மழை பெய்தது. அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. இந்த சிறு மழைக்கே சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை நுழைவாயிலில் மழை நீர் தேங்கியது. இத னால் நோயாளிகள், அட் டன்டர்கள், டாக்டர்கள், நர்சுகள், கம்பவுண்டர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புறவு பணியாளர்கள் என அனைவரும் வெளியே வருவதற்கு சிரமப்பட்டனர்.
இந்த தண்ணீர் வடி வதற்கு வசதி கிடையாது. நேற்று இரவு இதேபோல் பெய்த மழை காரணமாக அங்கே தண்ணீர் தேங்கியது. இதனை துப்புறவு பணியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றினர்.

இந்தநிலையில் தான் மீண்டும் இன்று பெய்த சிறு மழைக்கே மழை நீர் தேங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை வர உள்ள நிலையில் இப்படி சிறு மழைக்கே தண்ணீர் தேங்கினால் பெருமழைக்கு என்ன வாகும்? மழை முன் னெச்சரிக்கை நடவ டிக்கைகளில் ஈடுபட்டு தேங்கி நிற்கும் மழைநீர் வடிவதற்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.







