காஷ்மீர்:
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடந்து வருகிறது.
அந்த வகையில் குல்காம் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவரான தீபக் ரத்ரே, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்த மற்றொரு நபரான போபிந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி இரண்டாவது புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

சிலம்பம் அசோசியஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி:சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி






