தமிழகத்தில் இஞ்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன….

கேரளா, குடகு பகுதிகளில் இஞ்சி அறுவடை முடிவை எட்டியிருப்பதால் தமிழகத்தில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உணவுகள் தயாரிப்பில் இஞ்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதேபோல, தேநீர் கடைகளில் தினந்தோறும் விற்பனையாகும் சமோசா, பப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் தயாரிப்பிலும் இஞ்சி முக்கிய இடம் பெறுகிறது. மேலும், சில கடைகளில் இஞ்சி டீ தயாரிப்பின்போதும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, கரும்புச் சாறு விற்பனை செய்யும் கடைகளில் இயந்திரத்தில் கரும்பை அரைத்து சாறு பிழியும்போது கரும்புடன் எலுமிச்சை, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்தே அரைத்து சாறெடுக்கின்றனர். கரும்புச் சாறின் சுவையை மேலும் கூட்டும் வகையில் இவ்வாறு இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் அன்றாட உணவு தேவையாக மற்றும் பலகாரங்கள் தயாரிப்பின்போதும், உணவு சார்ந்த வர்த்தக மையங்களிலும் அதிக அளவில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இஞ்சியின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் தருமபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் 1 கிலோ இஞ்சியின் விலை ரூ.100 என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து படிப்படியாக கடும் விலை உயர்வு ஏற்பட்டு ஏப்ரல் 2-வது வாரத்தில் 1 கிலோ இஞ்சியின் ரூ.200 என்ற விலையில் விற்பனையாகிறது.

தற்போது இஞ்சி விலை சீராக உயர்ந்து வருகிறது. நேற்று (17-ம் தேதி) தருமபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் 1 கிலோ இஞ்சி ரூ.218-க்கு விற்பனையானது. உழவர் சந்தையின் விலையை விட தனியார் காய்கறிக் கடைகளில் கிலோவுக்கு ரூ.30 வரை விலை கூடுதலாகவே விற்பனையாகிறது. இஞ்சி சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் அறுவடை முடிவை எட்டியிருப்பதால் இவ்வாறு விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது.

இதுகுறித்து, தருமபுரியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் கூறியது: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு கேரளாவில் இருந்தும், கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் இருந்தும் தான் இஞ்சி சப்ளை ஆகிறது. குடகு பகுதியில் விளையும் இஞ்சி பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் வந்து சேர்கிறது. இஞ்சியாக பயன்படுத்த 6 மாதத்தில் அறுவடை செய்து விடுவார்கள். சுக்கு தயாரிக்கும் தேவைக்கு பயன்படுத்த இஞ்சியை நடவு செய்ததில் இருந்து 8 மாதங்கள் கழித்தே அறுவடை செய்வார்கள்.

கேரளா, குடகு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இஞ்சியின் அறுவடை தற்போது முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. எனவே, கடந்த சில வாரங்களாக இஞ்சியின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம் காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் காய்கறிகளுடன் 10 ரூபாய்க்கு இஞ்சி கேட்டு வாங்கிச் செல்வர். தற்போது ரூ.10-க்கு இஞ்சி கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இஞ்சி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 கிராம் இஞ்சியே ரூ.22 என்ற நிலையை எட்டி விட்டது. இன்னும் ஓரிரு மாதத்துக்கு இஞ்சி விலை உச்சத்தில் தான் இருக்கும் என்று செல்லபடுகிறது. அதன் பிறகு மீண்டும் இஞ்சி அறுவடை தொடங்கி, அதன் வரத்து அதிகமாகும்போது விலை படிப்படியாகக் குறையத் வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

தமிழகத்தில் இஞ்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன….

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65