தமிழகத்தில் இஞ்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன….

கேரளா, குடகு பகுதிகளில் இஞ்சி அறுவடை முடிவை எட்டியிருப்பதால் தமிழகத்தில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உணவுகள் தயாரிப்பில் இஞ்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதேபோல, தேநீர் கடைகளில் தினந்தோறும் விற்பனையாகும் சமோசா, பப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் தயாரிப்பிலும் இஞ்சி முக்கிய இடம் பெறுகிறது. மேலும், சில கடைகளில் இஞ்சி டீ தயாரிப்பின்போதும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, கரும்புச் சாறு விற்பனை செய்யும் கடைகளில் இயந்திரத்தில் கரும்பை அரைத்து சாறு பிழியும்போது கரும்புடன் எலுமிச்சை, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்தே அரைத்து சாறெடுக்கின்றனர். கரும்புச் சாறின் சுவையை மேலும் கூட்டும் வகையில் இவ்வாறு இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் அன்றாட உணவு தேவையாக மற்றும் பலகாரங்கள் தயாரிப்பின்போதும், உணவு சார்ந்த வர்த்தக மையங்களிலும் அதிக அளவில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இஞ்சியின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் தருமபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் 1 கிலோ இஞ்சியின் விலை ரூ.100 என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து படிப்படியாக கடும் விலை உயர்வு ஏற்பட்டு ஏப்ரல் 2-வது வாரத்தில் 1 கிலோ இஞ்சியின் ரூ.200 என்ற விலையில் விற்பனையாகிறது.

தற்போது இஞ்சி விலை சீராக உயர்ந்து வருகிறது. நேற்று (17-ம் தேதி) தருமபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் 1 கிலோ இஞ்சி ரூ.218-க்கு விற்பனையானது. உழவர் சந்தையின் விலையை விட தனியார் காய்கறிக் கடைகளில் கிலோவுக்கு ரூ.30 வரை விலை கூடுதலாகவே விற்பனையாகிறது. இஞ்சி சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் அறுவடை முடிவை எட்டியிருப்பதால் இவ்வாறு விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது.

இதுகுறித்து, தருமபுரியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் கூறியது: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு கேரளாவில் இருந்தும், கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் இருந்தும் தான் இஞ்சி சப்ளை ஆகிறது. குடகு பகுதியில் விளையும் இஞ்சி பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் வந்து சேர்கிறது. இஞ்சியாக பயன்படுத்த 6 மாதத்தில் அறுவடை செய்து விடுவார்கள். சுக்கு தயாரிக்கும் தேவைக்கு பயன்படுத்த இஞ்சியை நடவு செய்ததில் இருந்து 8 மாதங்கள் கழித்தே அறுவடை செய்வார்கள்.

கேரளா, குடகு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இஞ்சியின் அறுவடை தற்போது முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. எனவே, கடந்த சில வாரங்களாக இஞ்சியின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம் காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் காய்கறிகளுடன் 10 ரூபாய்க்கு இஞ்சி கேட்டு வாங்கிச் செல்வர். தற்போது ரூ.10-க்கு இஞ்சி கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இஞ்சி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 கிராம் இஞ்சியே ரூ.22 என்ற நிலையை எட்டி விட்டது. இன்னும் ஓரிரு மாதத்துக்கு இஞ்சி விலை உச்சத்தில் தான் இருக்கும் என்று செல்லபடுகிறது. அதன் பிறகு மீண்டும் இஞ்சி அறுவடை தொடங்கி, அதன் வரத்து அதிகமாகும்போது விலை படிப்படியாகக் குறையத் வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இஞ்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன….

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.