சென்னை:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2008&-2026 வரை 12,856 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதில் 7 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவிக்கையில், மாவட்ட வாரியாக டெங்கு காய்ச்சல் அதிகம் உள்ள 10 மாவட்டங்கள்: சென்னை -33, கோவை – 26, திருவள்ளூர்18, சேலம்- 15, செங்கல்பட்டு – 10, புதுக்கோட்டை – 09, திருப்பூர் – 08, கிருஷ்ணகிரி – 07, ராணிப்பேட்டை- 07, விழுப்புரம் – 06 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அரசு தினந்தோறும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை, டெங்கு காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை, பன்றிகாய்ச்சல் (எச்1என்1) நோயாளிகளின் எண்ணிக்கை, நோயாளிகள் குவியும் பகுதி, உயிரிழப்புகள், கொசு உற்பத்தியாக கூடிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொசுப்புழு ஒழிப்பு, முதிர் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் அதிக அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் தேவையான அனைத்து சிகிச்சைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தினசரி 5805 அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீவிர காய்ச்சல் கண்காணிப்புகள், சந்தேகிக்கப்படும் டெங்கு நோயாளிகளுக்கான பரிசோதனை செய்யப்படுகிறது. மக்களின் ஒத்துழைப்புடன் சட்டமன்ற உறுப்பினர்கள் தண்ணீர் தேங்கியுள்ளதை கண்டறிய வேண்டும். இந்த ஆண்டு டெங்கு அதிகமாக பரவாமல் இருப்பதையும், டெங்கு மூலம் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் இந்தாண்டு 7 பேர் உயிரிப்பு: அமைச்சர் அருண்ராஜ்
சென்னை:தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருவது வழக்கமாக






