சென்னை:
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இது தங்க ஆபரண பிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்றத்தை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. நேற்று தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வடைந்திருந்தது. ஆனால் இன்று நகைப்பிரியர்களை தலைசுற்ற வைக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,680க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 100 காசுகள் அதிகரித்து ரூ.81.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






