நீர்இன்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்றி அமையாது ஒழுக்கு.
குறள் விளக்கம்: வானிலிருந்து பெய்யும் மழை இல்லாவிட்டால்
எப்படிப்பட்ட சிறந்தவர்க்கும் ஒழுக்கம் நிலைக்காது எனும் கருத்து தவறானதாகும் அதே நேரத்தில் வானிலிருந்து பொழியப்படும் பரிசுத்த ஆவியானவரின் துணை இல்லாவிட்டால் எப்படிப் பட்டவர்களுக்கும் ஒழுக்கத்தைக் காத்துக்கொள்ள இயலாது என்பது இந்த அதிகாரத்தின் உட்கருத்து எனப்படுகிறது.
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யோவான் 16:8 பரிசுத்த
ஆவி வரும்போது “அவர் வந்து பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் ” என திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.






