குன்றத்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று காலை குன்றத்தூர் நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ஒரு வாரத்திற்குள் முடிவை தெரிவிப்பதாகவும் அவர்களிடம் கூறினார். இதை தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால், அவர்கள் தங்களது பணியை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.







