இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 310 ஆக இருந்த நிலையில் இன்று 288 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 90 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 85 ஆயிரத்து 79 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நேற்று 583 பேர் அடங்குவர். தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,925 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 297 குறைவாகும். தொற்று பாதிப்பால் நேற்று சத்தீஸ்கரில் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட ஒரு மரணம் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





