நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக நிர்ணயம்.

நாமக்கல்:
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இம்முட்டைகள் தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினசரி 50 லட்சம் முட்டைகளும், கேரளாவுக்கு ஒரு கோடி முட்டைகளும், மீதம் உள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், பாண்டிச்சேரிக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சராசரியாக தினசரி 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
கடந்த மாதம் 25-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகள் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 17 நாட்களில் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 காசுகளும் அதனை தொடர்ந்து இன்று 20 காசுகளும் பண்ணை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
விலை குறைப்பு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் துவங்கிய நிலையில் சத்துணவு திட்டத்திற்கு முட்டை அனுப்புவது சற்று குறைந்துள்ளதாகவும் அதே போல் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு முட்டை விற்பனையும் குறைந்து முட்டைகள் அதிகளவு தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், முட்டை விற்பனையை உயர்த்தும் நோக்கத்தில் பண்ணை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
அதேசமயம் கறிக்கோழி விலை கிலோ ஒன்றுக்கு 92 ரூபாயும், முட்டை கோழி 72 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக நிர்ணயம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.