நீலகிரி மாவட்டம் உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர் சாலையில் இருந்து உல்லத்தி செல்லும் வழியில் வாகன விபத்து வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் பலருக்கு பலத்த காயம் ஏறபட்டு உள்ளது.
வெளி மாநில வாகனங்களுக்கு கல்லட்டி வழியாக மசினகுடி, மைசூர் செல்ல.தடை உள்ளதால் பலர் இந்த சாலைவழியாக செல்ல குறுக்கு வழிகளை நாடுகின்றனர் இது ஆபத்தான சாலை என்பதை மறந்துவிடுகின்றனர்.
அப்படி குறுக்கு வழியில் சுற்றுலா வாகனம் ஒன்று கல்லட்டி சாலையை போய் சேர்வதற்காக புதுமந்து காவல் நிலையம் வழியாக வந்து மேலூர் சாலையிலிருந்து கல்லடி செல்வதற்காக வரும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இது போன்ற விபத்துக்கள் தடுத்திடவும் உயிர் இழப்புகளை தடுத்திடவும் காவல்துறையினர் நிரந்தரமாக தீர்வு காணப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






