சென்னை:
விபத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் மூலமாக ரூ.2 லட்சம் வரை நிவாரணம் வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில். பத்திரிகையாளர் நல வாரியக் குழுவின் 8, 9-வது கூட்டங்களில் பத்திரிகையாளர்களின் விபத்து மரண நிவாரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், பத்தி ரிகையாளர் நலவாரிய நிதியில் இருந்து விபத்தால் மரணமடையும் பத்திரிகையாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும், இந்தத் தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இல்லாமல், நலவாரிய நிதியில் இருந்தே அளிக்கவும் அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை கவனமுடன் பரிசீலித்த அரசு, அதை யேற்று தற்போது அதிகாரப்பூர்வமாக அரசாணையை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல வாரியம் மூலம் நிவாரணம் வழங்கப் படும் என்கிற அரசாணை வரவேற்கத்தக்கது தான். ஆனால் இன்னும் ஏராளமான பத்திரி கையாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை. அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலையே நீடிக்கிறது.
பத்திரிகை துறையில்¢ கீழ்மட்ட பணியாளர்கள் வரை உள்ளனர். அவர்களுக்கு பத்திரிகை நிறு வனத்தின் அடையாள அட் டையை தவிர வேறு ஒரு அங்கீகாரமும் கிடையாது. உண்மையாக பத்தி ரிகைகளில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலானோர் அரசின் எந்த பலனையும் இதுவரை பெற்றது கிடையா-து.
பெரிய பெரிய பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களே அனைத்து பலனையும் அனுபவித்து வருகின்றனர். அரசு அங்கீகார அடையாள அட்டை என்பது அனைத்து பத்திரிகைகளுக்கும் கிடைப்பது கிடையாது. ஆனால் பல பத்திரிகைகள் தினமும் தங்கள் பத்திரிகைகளை அச்சடிக்கத்தான் செய்கிறார்கள். மாத, வார, மாதம் இருமுறை அச்சடிக்கும் பத்திரிகைகளும் முறையாக அச்சடித்து வெளியிட்டு வருகின்றன.
இதுபோன்ற நிறுவனங்களில்¢ செய்தி ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்பட கலைஞர்கள், விளம் பர வடிவமைப்பாளர், பக்க வடிவமைப்பாளர், என்ஜினியர், நாளிதழ், மாத இதழ், வாரம் இருமுறை நாளிதழ்களை விநி யோகிப்பவர்கள் என எராள மான பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் பயனடைவது தான் நல வாரியம் அமைத்ததன் முழு பயனாக அமையும். பெரிய பத்திரிகைகளில் உள்ளவர்கள் மட்டும் பயனடைந்தால் அது நல வாரியத்திற்கு நன்மை பயக்காது.
தற்போது ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்று திறம்பட செயல் பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களின் நலன் கருதி கடைநிலை பணியாளர்கள் வரை பயன்பெறும் வகையில் பத்திரிகையாளர் நலவாரியத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும். இதனால் செய்தித்துறையில் பணியாற்றும் ஏராளமான குடும்பங்கள் பயன டையம். இதுகுறித்து அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதே செய்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

போதைபொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: சென்னை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சென்னை:சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் இன்று (11.8.2026) சென்னை மத்திய






