பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026னை முன்னிட்டு, இந்திய தேர்தல்
ஆணையத்தின் செயல்பாட்டு செயல்முறை (Standard Operating Procedure) மற்றும்
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு
செல்லப்படும் ரூ.10,000/-த்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.50,000/- மேல்
ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அரசு
கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை
மேல்முறையீட்டு குழுவிடம் (Appellate authority) தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும்
உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்.
மேற்படி நிகழ்வுகளை சென்னை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத்
தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் (FST) என்ற வீதம், 48 பறக்கும் படைகளும் (FST), 3
நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (SST) என்ற வீதம், 48 நிலையான கண்காணிப்புக்
குழுக்களும் (SST) ஏற்படுத்தப்பட்டு, இக்குழுவினர் மூன்று சுழற்சி முறைகளில் பணிகளை
மேற்கொள்வார்கள். இக்குழுக்கள் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை
கண்காணித்து அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், 21.03.2026 அன்று வாகன சோதனையின்போது பறக்கும்
படை குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம்
டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.54,290/-, பெரம்பூர்
சட்டமன்றத் தொகுதியில் ரூ.62,110/-, திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில்
ரூ.6,59,170/-,
எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.77,430/-, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில்
ரூ.3,00,000/-, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.60,400/-, மற்றும் நிலையான
கண்காணிப்புக் குழுவினரால் திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,19,000/-,
எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.2,09,000/-, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
சட்டமன்றத் தொகுதியில் ரூ.94,000/-, அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில்
ரூ.2,24,000/-, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் ரூ.2,13,400/-, என மொத்தம்
ரூ.20,72,800/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இன்று (22.03.2026) வாகன சோதனையின்போது பறக்கும் படை குழுவினரால்
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் இராயபுரம்சட்டமன்றத் தொகுதியில் ரூ.31,500/-, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில்
ரூ.34,75,200/-, மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் பெரம்பூர் சட்டமன்றத்
தொகுதியில் ரூ.1,00,000/-, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் ரூ. 1,00,000/-, என
மொத்தம் ரூ. 39,90,200/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
21.03.2026 முதல் 22.03.2026 வரை 2 நாட்களில் பறக்கும் படை மற்றும்
நிலையான கண்காணிப்புக் குழுவினரால் மொத்தம் ரூ.60,63,000/- ரொக்கப் பணம்
மற்றும்
மதுபானம் 4.2 லிட்டர், போதைப்பொருள் 28 கிராம் மற்றும் விலைமதிப்புள்ள உலோகம்
ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்