கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ பதிவில் பள்ளி சீருடையில் 2 மாணவிகள் மது அருந்துகிறார்கள். பள்ளியின் வகுப்பறை முன்பு உள்ள மேஜை மீது ஒரு குவார்ட்டர் மது, சைடிஸ், தண்ணீர், சாப்பாடு உள்ளது. இரண்டு மாணவிகளும் அந்த குவார்ட்டர் மதுவை மாற்றி, மாற்றி குடிக்கிறார்கள். அதனை மற்றொரு மாணவி வீடியோவாக படம் பிடிக்கிறார். அப்போது, மதுகுடிப்பதை ஏன் படம் பிடிக்கிறாய் என்று மாணவி ஒருவர் கேட்பது போல் வீடியோ இருக்கிறது.
இந்த வீடியோ வைரலானது பள்ளி கல்வித்துறையை பெரும் அதிர்ச்க்குள்ளாகியது. கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், தக்கலை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையை நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கு இடமாற்றம் செய்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் மது குடித்த மாணவிகளுக்கு மதுபாட்டில் கிடைத்தது எப்படி? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான






