மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அண்ணா நகர் மண்டலம், புல்லா அவென்யூவில் தேசிய நகர்புற சுகாதார திட்ட நிதி ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்புற சமுதாய சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம். கே. மோகன், கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மருத்துவர் டி.சி.செல்வவிநாயகம், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் திருமதி்.மெட்டில்டா கோவிந்தராஜ், மண்டல அலுவலர் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






