செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் நேற்று தாம்பரம் மாநகராட்சி உட்பட பல்லாவரம் மண்டலம் 2-ல் அடங்கிய பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெரு உள்ளடக்கிய குவாரி தெரு, குவாரிமேட்டுதெரு, மலைமகள் தெரு ஆகிய பகுதிகளில் சாலை வசதிகள் சரியான முறையில் இல்லாததால் அவ்வூர் பொதுமக்கள் 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சா.நெடுஞ்செழியனிடம் தெரியப்படுத்தினர்.

நீண்ட நெடிய நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டு இருந்த அடிப்படை வசதிகளைக் குறித்துக் குடியிருப்போர் நலச் சங்கத்தினரின் சார்பாக அடிப்படை கோரிக்கைகளை மண்டலம் 2-ன் குழு தலைவரிடம் வலியுறுத்தப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்க மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று சாலைகள் போடப் பூஜை செய்யபட்டு துவக்கி வைக்கப்பட்டது.


செய்திகளுக்காக,
இரா. மு. அருண்குமார்
தலைமை மாவட்ட நிருபர், செங்கல்பட்டு.
சி. சுகுமார் – புகைப்பட கலைஞர்







