பிராட்வேயில் இருந்து ஐ.ஓ.சி. நோக்கி நேற்று முன்தினம் மாநகர பேருந்து (எண்44) சென்றது. தண்டையார்பேட்டை தபால் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது தண்டையார்பேட்டை, காசிமேடு பகுதியை சேர்ந்த 10 மற்றும் 11-ம் பள்ளி மாணவர்கள் சிலர் ஏறி பின்புற படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்தனர். இதனை நடத்துனர் சிவசங்கரன் எச்சரித்தார். இதனால் கோபமடைந்த அடைந்த மாணவர்கள் தண்டையார்பேட்டை மெட்ரோ ரெயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது சாலையில் இருந்த பீர் பாட்டிலால் தாக்க முயன்றனர். பின்னர் பஸ் புறப்பட்ட போது பீர் பாட்டிலை பஸ்சின்படிக்கட்டில் விசி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பேருந்து நடத்துனர் சிவசங்கரன், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார்கள் 6 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கபட்டனர்.







