மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 10 லட்ச ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார். தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடுயான மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மிக்ஜாம் புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண நிதியை வழங்கிடும்மாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது மக்களுக்கு வேண்டுகொள் விடுத்தார். அதனை ஏற்று முதல்வரின் பொது நிவாரண நிதிக்கா நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





