முதுபெரும் தமிழறிஞர், பத்திரிகை யாளர்களுகான பாராட்டுப்பெருவிழா
தமிழ்நாடு பத்திரிகை ஊடகப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களுக்கான பாராட்டுவிழா மற்றும் விருது வழங் கும் விழா ஏப்ரல் 12 அன்று சென்னை தாம்பரத்தில் உள்ள சங்கவளாகத் தின் அரங்கத்தில் சிறப்புடன் நடந்தே றியது.
சங்கத்தின் மதிப்புறுத் தலைவர் கல் வியாளர் ஆதிமாறன், முதன்மை ஆலோசர் ஜீவா.மணிக்குமார் தலை மையில் நடைபெற்ற விழாவின் தொட க்கத்தில் , வழக்கறிஞர் உமா சங் கரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி, நிகழ்ச்சி யை ஒருங்கிணைத்து நடத்தினார். பாவலர் கீர்த்தி தமிழ்ப் பாடல்களை பாடி மகிழ்வித்தார்.
சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா ளர் முனைவர் பா.கோபாலகிருஷ் ணன் வரவேற்புரை நல்கி, சங்கத்தின் செயல்பாடுகளை விரித்துரைத்தார். மாநிலத் தலைவர் இதழாளர் இசைக் கும்மணி, மாநில செயல் தலைவர்கள் எஸ். எம். கோவிந்தராஜன், தமிழ்ச் செம்மல் பா. சம்பத்குமார், துணைச் செயலாளர் பா.கிருஷ்ணகுமார் செங்கை மாவட்ட தலைவர் என். குல சேகரன் உள்ளிட்டோர் வாழ்த்துரைத்து பேசினர். பொதுச் செயலாளர் கோபா லகிருஷ்ணனின் பிறந்த நாள் விழா வும் வாழ்த்துரைகளோடு கூடுதல் நிகழ்வாக நடந்தேறியது.
“உயர்தனிச் செம்மொழியாம் தமிழால் இணைந்திருக்கின்றோம். கலை, இல க்கியம், இதழியல் என பிரிவுகளைக் கொண்ட தமிழ் ஒன்றுக்குள் ஒன்று பிணைந்து இருக்கக்கூடியது . கவிஞர் எழுத்தாளர்களே ,இதழாளர்களாகவும் இதழாளர்களே கலை இலக்கியப் படைப்பாளிகளாகவும் இருப்பதினால் பத்திரிக்கையாளர் சங்கம் தமிழறிஞ ர்களை பாராட்டி மகிழ்கிறது. அவ் வகையில் இங்கு வந்துள்ள கவிஞர் எழுத்தாளர் இதழாளர் பெருமக்களை வாழ்த்தி வரவேற்று அமைகிறேன் என இதழாளர் இசைக்கும்மணி பேசி னார்.
இணையர்களாக வந்திருந்த கவிஞர் கள் அரக்கோணம் சீ.மோகன், வியாசர் பா.சுந்தரம், சேலம் மு.வடிவேல், பா. சுரேஷ் குமார், பழனி சுந்தரேசன், கவி தாயிணிகள் தனம், விஜயலட்சுமி, கீதா, பத்திரிகையாளர்கள் மு.ம. மோகன், என்.குலசேகரன், பசுமைக் குமார், வே.. பாலராஜ், பி.சங்காரவேல், க.அனந்த ராமகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர் புத்துறை இணை இயக்குனர் (ஓய்வு) ஜீவா. மணிக்குமார் உள்ளிட்டோருக்கு மதிப்புறுத் தலைவர் ஆதிமாறன் பரி சுகளையும் விருதுகளையும் பாராட்டு களையும் வழங்கி சிறப்பித்தார்.
விருதாளர்கள் பற்றிய விவரக்குறிப் புகளை சொல்லி,முனைவர் தாமரைப் பூவண்ணன், கவிஞர் களக்காடு மாரி சுப்பிரமணியன் அவர்களை அறிமுக ப்படுத்தி பேசினர். பாராட்டப்பட்டவர் கள் சார்பில் பசுமைக்குமார் ,கவிஞர் அரக்கோணம் சீ.மோகன் ஏற்புரைத்து பேசினர் . விழா முடிவில் சங்கத்தின் பொருளாளர் க.ராமு நன்றி தெரிவி த்தார்.
பத்திரிக்கை ஊடகவியலாளர்கள், தமிழறிஞர்கள் , செங்கல்பட்டு திருவ ள்ளூர் மாவட்ட சங்கப் பொறுப்பாளர் கள், உறுப்பினர்கள் எனப் பலரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதழாளர் இசைக்கும்மணி





