ராகுல் காந்தியின் “எக்ஸ்” கணக்கை முடக்கி வைக்க பாஜக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்…

இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்து வரும் இந்த நேரத்தில் பாஜக அரசு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எக்ஸ் (ட்விட்டர்) கணக்கை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இன்று ஒரே கட்டமாக 199 தொகுதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்தது வருகின்றது. இது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நடைபெற்று வருகிறது. காலை ஏழு மணி முதல் மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

மொத்தம் 200 தொகுதிகள் கொண்ட இந்த தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் இறந்த நிலையில் அந்த தொகுதியில் நடக்கவிருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. மேலும் டிசம்பர் 3ம் தேதி இந்த தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தை முடக்குமாறு ராஜஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை தற்பொழுது எழுதியுள்ளது பாஜக. அந்த கடிதத்தில் “தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே பிரச்சாரங்கள் மற்றும் பிற தேர்தல் சார்ந்த விஷயங்களை அந்தந்த கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் தேர்தல் ஆணைய வழக்கமான விதி”.

“ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த விதி பின்பற்றாமல் இன்று காலை வெளியிட்ட அவரது ட்விட்டர் பதிவில் ராஜஸ்தான் மாநிலத்தில் செய்யப்படவுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து ஒரு பதிவை அவர் போட்டுள்ளார். மேலும் “மக்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் உத்தரவாதம் அளிக்கும் காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுங்கள்” என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். எனவே இது தேர்தல் விதி மீறல் என்று கூறி, உடனடியாக அவருடைய எக்ஸ் (ட்விட்டர்) தளத்தை முடக்க வேண்டும் என்றும் பாஜக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தை முடக்க பாஜக தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

ராகுல் காந்தியின் “எக்ஸ்” கணக்கை முடக்கி வைக்க பாஜக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட