வெயில் எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு அனைவருடைய மனதிலும் இருந்து வருகிறது. ஏனென்றால் அக்னி நட்சத்திரம் காலம் முடிந்த பிறகும், அந்த அளவுக்கு வெயிலின் உக்கிரம் கொஞ்சம் கூட குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் சென்னையில் கடந்த 3 தினங்களாக வெயில் கொளுத்துகிறது. நேற்று முன்தினம் சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி வெயில் பதிவான நிலையில், நேற்று 108 டிகிரியாக பதிவாகியிருந்தது. நுங்கம்பாக்கத்தில் நேற்று 107 டிகிரி வெயில் பதிவானது. வாட்டி வதைக்கும் வெப்பத்தால், சென்னை வாசிகள் வாடிப்போய் இருக்கின்றனர். இதுபோல், கடலூர், ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 13 இடங்களிலும் வெயிலின் கோரத்தாண்டவத்தை பார்க்க முடிந்தது. புதுச்சேரியில் 105.08 டிகிரியும் (40.6 செல்சியஸ்), காரைக்காலில் 100.4 டிகிரியும் (38 செல்சியஸ்) வெயில் பதிவாகியிருந்தது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





