தமிழகத்தில் காலூண்ற பா.ஜ.க. மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதற்கான தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடத்தும் யுத்தம் பெரிய அளவில் விஷ்வரூபம் எடுத்து வருகிறது. தற்போது வடமாநில இளைஞர்களை தமிழர்கள் தாக்குவது போன்ற போலி வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பும் விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அவரை விசாரிக்க உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க. ஐ.டி. விங் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். இந்த நிகழ்வு தமிழகத்தில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா
தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் திருநீர்மலை கிராமம்






