அனல் காற்றால் மரணம் அடைந்தால் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

சென்னை: ‘கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப அலை தாக்கம், இனி மாநில பேரிடராகக் கருதப்படும். வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு, 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோடையில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில், முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான நகரங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலை வீச்சும் காணப்பட்டது.


இதில், பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் பந்தல் திறப்பு, ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்தது; திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.


தனிப்பிரிவு

வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. எனவே, வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு, பேரிடர் நிதியில் இருந்து உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, வெப்ப அலை வீச்சு மாநில பேரிடராக அறிவிக்கப்படும் என்று, சட்டசபையில் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில், சென்னை, கோவை, கடலுார், தர்மபுரி, ஈரோடு, கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், தஞ்சை, திருப்பத்துார், திருச்சி, வேலுார், திருவள்ளூர், திருநெல்வேலி மாவட்டங்களில் வெப்ப அலை வீச்சு தொடர்ந்து பல நாட்கள் நீடித்தது.

இதில், பாதிப்பு தடுப்புக்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், உரிய நிவாரணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

ரூ.4 லட்சம்


இதை கருத்தில் வைத்து, வெப்ப அலை வீச்சு மாநில அளவிலான பேரிடராகக் கருதப்படும். இதில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு, 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

மருத்துவ உதவி, ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கான தொகை, பேரிடர் நிதியில் இருந்து பெறப்படும். இதற்கான அறிவிப்பை, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

அனல் காற்றால் மரணம் அடைந்தால் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65