அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜபாட்டா மிராலிசை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் 9-வது வரிசையில் இருக்கும் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெரு நாட்டை சேர்ந்த வாரிலாசை தோற்கடித்தார். பிரெஞ்சு ஓபன் போட்டியில் 2-வது இடத்தை பிடித்தவரும், 5-வது வரிசையில் உள்ள வருமான கேஸ்பர் ரூட் (நார்வே) மற்றும் 7-வது வரிசையில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் 2-வது சுற்று ஆட்டங்களில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

சீனாவை சேர்ந்த ஜாங் 6-4, 5-7, 6-2, 0-6, 6-2 என்ற கணக்கில் கேஸ்பர் ரூட்டையும், சுவிட்சர்லாந்து வீரர் டொமினிக் ஸ்டிக்கர் 7-5, 6-7 (2-7), 6-7 (5-7), 7-6 (8-6), 6-3 என்ற கணக்கில் சிட்சிபாசையும் மிக திறமையாக விளையாடி வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டாரியா சேவிலியை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறி தகுதி பெற்றார். மற்ற 2-வது சுற்று போட்டிகளில் 4-வது வரிசையில் உள்ள ரைபகினா (கஜகஸ்தான்), 6-வது வரி சையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா), 11-வது வரிசையில் உள்ள கிவிட் டோவா (செக்குடி யரசு) ஆகியோர் வெற்றி பெற்றார்கள.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட