பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான 2023-24ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பூந்தமல்லி பிரதான சாலையில் உள்ள நேரு பூங்கா விளையாட்டுத் திடலில் தொடங்கி வைத்து, வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) த.விசுவநாதன், இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, வட்டார துணை ஆணையாளர்கள் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், (மத்தியம்), எம்.பி.அமித், (தெற்கு) நிலைக்குழுத் தலைவர்கள் கோ.சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரிவிதிப்பு (ம) நிதி), மண்டலக்குழுத் தலைவர்கள் ஏ.வி.ஆறுமுகம், வெ.ராஜன் , எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






